பெண் கவுன்சிலர் காட்டிய போட்டோ...மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

x

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேயர் சுந்தரி ராஜா மற்றும் ஆணையர் காந்திராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மேயர் தேர்தலில் எதிராக வாக்களித்த 10 திமுக உறுப்பினர்கள், தங்கள் வார்டை மேயர் புறக்கணிப்பதாக கூறி முற்றுகையிட்டனர். அப்போது மேயர் ஆதரவு கவுன்சிலருக்கும், மேயர் எதிர்ப்பாளர் கவுன்சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, பன்றிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக, இரு பெண் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஜாதி ரீதியாக அவமானப்படுத்தியதாகக்கூறி தர்ணா போராட்டம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்