வேலைக்கு செல்லுமாறு கண்டித்த தந்தை...விரக்தியில் விபரீத முடிவு எடுத்த இளைஞர்

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, வேலைக்கு செல்லுமாறு தந்தை கண்டித்ததால், விரக்தியில் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமதுரை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மணி என்பவரை, வேலைக்கு செல்லுமாறு கூறி அவரது தந்தை அழகுமலை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், கொல்லப்பட்டி ரயில்வே கேட் அருகே மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்