`கடலை எண்ணெய்' கேட்ட விவசாயிகள் - கைது செய்த காவல் துறை

x

நியாய விலைக் கடையில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயை விற்பனை செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய்களை மானிய விலையில் விற்பனை செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழ அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்