இடம் பிரச்சினை தகராறு... விவசாயியை கொடூரமாக கொலை செய்த நபர்... வலைவீசி தேடும் போலீஸ்

x

பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ரெங்கையா என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வடிவேலு என்பவருக்கும் ஏற்கனவே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ரெங்கய்யாவுக்கும் வடிவேலுவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வடிவேலு மறைத்து வைத்திருந்த கத்தியால், ரெங்கையாவின் கழுத்தை அறுத்தார். படுகாயமடைந்த ரெங்கையா, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான வடிவேலுவை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்