"எனக்கு அஜிஸ் தான் வேணும்" - குமரியில் `வினோத' கள்ளக்காதல்.. நெஞ்சை காட்டி கதறும் கணவன்

x

கன்னியா குமரி மாவட்டத்தில் கள்ளகாதலியின் கணவரை தாக்கி விட்டு கைதான கள்ளக் காதலன், ஜாமினில் வெளிவந்து காதலியின் கொழுந்தனாரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தக்கலையை அடுத்த முத்தலக்குறிச்சியைச் சேர்ந்த ராஜாவின் மனைவி ஷாலினி, கடந்த மாதம் 2 பெண் குழந்தைகளை கணவரிடம் விட்டு விட்டு, அதே பகுதியை சேர்ந்த அஜிஸ் என்பவருடன் வாழப் போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜாவை அஜிஸ் தடுத்து நிறுத்தி, பாட்டிலால் ராஜாவின் மார்பில் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார், தலைமறைவாக இருந்த அஜிஸை கண்டுபிடித்து கைது செய்தனர். நிபந்தனை ஜாமினில் வெளிவந்த அஜிஸ், வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ராஜாவின் சகோதரர் ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை கம்பியால் கொடூரமாக தாக்கி உள்ளார். இதில், படுகாயமடைந்த ராஜேஷ், பத்மநாபபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் அஜிஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்றும், தனது மனைவி போல் மேலும் பல பெண்கள் அஜிஸிடம் சிக்கி உள்ளதாகவும் ராஜா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்