விரைவு ரயிலில் பயணிகளுக்கு நேர்ந்த சோகம் - தலைமுடி ஒட்டியிருந்த போர்வையால் அதிர்ச்சி

x

பாலக்காடு விரைவு ரயிலில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, சுத்தம் செய்யப்படாத போர்வைகள் பயணிகளுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த பாலக்காடு விரைவு ரயிலில், பி2 கோச்சில் பயணிகளுக்கு போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்போது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்படாத போர்வைகள் தங்களுக்கு வழங்கப்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டினர். போர்வையில் தலைமுடி ஒட்டியிருந்ததாக கூறியதை தொடர்ந்து, இரயில்வே ஊழியர்கள் போர்வையை மாற்றி வழங்கினர். இதுகுறித்து ஊழியரிடம் கேட்டபோது, தினசரி இதுபோன்ற பிரச்சனைகள் எழும் என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்