NLC விரிவாக்கம் - குவிந்த போலீஸ் - அதிகரித்த பரபரப்பு

x

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி கிராமத்தில், பெரும்பாலான விளை நிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திள்ளது. இந்நிலையில், அங்கு உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளை கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிறுவனம் துவங்கியுள்ளது. இதற்காக, காவல்துறை பாதுகாப்புடன் சென்ற நில எடுப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர், பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வீடுகளை அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது வீடுகளை அளவீடு செய்யக்கூடாது என அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து, எதிர்ப்பு தெரிவித்தோரின் வீடுகளை மட்டும் விட்டுவிட்டு, எதிர்ப்பு தெரிவிக்காத வீடுகளை மட்டும் அளவீடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்