"அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு இடையூறு" - முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

x

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். அப்போது, தொகுதி வாரியாக உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, சட்டமன்ற உறுப்பினர் நிதியை முறையாக பங்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அப்போது, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அதிகாரிகள் வேண்டுமென்றே அரசியல் காழ்புணர்ச்சியோடு, பழிவாங்கும் நடவடிக்கையாக பல்வேறு இடையூறுகளை கொடுத்து வருவதாக எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்