எடப்பாடி வீட்டிற்கு விரைந்த முன்னாள் அமைச்சர்.. 6 மணி நேரத்தை கடந்த ஆலோசனை.. வெளியான தகவல்

x

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய இல்லத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் ராஜ்சத்தியன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 6 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்ற ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது தொடர்பாகவும், அரசியல் வல்லுனர்களை வரவழைத்து தேர்தலை கையாள்வது குறித்து ஆலோசனை கேட்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது


Next Story

மேலும் செய்திகள்