பல நாட்கள் ஸ்கெட்ச்! நம்பி சென்ற டிரைவர்!சரமாரியாக வெட்டி பகையை தீர்த்த நண்பன்!தட்டித்தூக்கிய போலீஸ்

x

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்தவர் விக்னேஷ். லாரி ஓட்டுநரான இவரை கடந்த 24 ஆம் தேதி முதல் காணவில்லை எனக்கூறி புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர். விக்னேஷ் மீது காவல்நிலையத்தில் பல குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவர, அவரின் நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சத்தி வடக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் விக்னேஷை கொலை செய்ததாக கூறி சத்தியமங்கலம் விஏஓ-விடம் சரணடைந்த நிலையில், விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விக்னேஷிற்கும் தனக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில் தனது மாமனார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷை கொன்றதாகவும், உடலை காசிக்காடு செல்லும் வழியில் குழி தோண்டி புதைத்தாகவும் சசிகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். உடனே, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சுமார் 24 நாள்கள் கழித்து விக்னேஷின் உடலை தோண்டி எடுத்த நிலையில், உடலை உடற்கூராய்வு செய்து பின்னர் மீண்டும் அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தில் சசிகுமாரை கைது செய்து சிறையிலடைத்த போலீசார், மேலும் தலைமறைவாக உள்ள சிலரை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்