NH போலீசாருக்கு காருக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி | Erode

x

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே, சுமார் 100 கிலோ அளவிலான போதை பொருளை காரில் கடத்திய 2 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.ஈரோடு அருகேயுள்ள சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பெங்களூருவில் இருந்து ஈரோட்டை நோக்கி சென்ற சொகுசு காரை மறித்து சோதனையிட்டனர். சோதனையில், 100கிலோ எடையுள்ள போதை பொருள்கள் 4 மூட்டைகளில் காருக்குள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார், ராஜஸ்தானை சேர்ந்த அசோக்குமார் மற்றும் கோவிந்த் ஆகிய இருவரை கைது செய்தனர். இருவரும், ஈரோடு அடுத்துள்ள கொல்லம்பாளையத்தில் வீடு எடுத்து தங்கி, போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவர, இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்