ஈரோடு எம்.பி த*கொலை முயற்சி?... சல்பாஸ் மாத்திரை.. 48 மணி நேரம் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

x

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று எம்.பி.யானவர் கணேசமூர்த்தி. தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கபட்ட நிலையில், ஈரோட்டில் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இருந்தபோதிலும், வேட்பாளர் அறிமுக கூட்டம் போன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த கணேசமூரத்தி வீட்டில் திடீரென்று மயக்கம் அடைந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், உடல்நலன் கருதி, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தியபோது, கணேசமூர்த்தி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தாகவும், அதனால் சல்பாஸ் எனப்படும் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்