"எங்க அம்மாவ தூக்குல போட்டாலும் தப்பில்ல" - ஈட்டியை இறக்கிய பெற்ற மகளின் வார்த்தைகள்

x

ஈரோடு அருகே, காதல் திருமணத்தில் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவியை வாகனம் ஏற்றிக் கொலை செய்த சம்பவத்தில், தாய், தந்தையை தூக்கிலிட வேண்டும் என மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

சத்தியமங்கலம் அருகே எரங்காட்டூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் - மஞ்சு என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், அதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். சுபாஷ் தனது தங்கையான பத்தாம் வகுப்பு படிக்கும் ஹாசினியை, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். அப்போது, மஞ்சுவின் தந்தை பிக் அப் வேனை வைத்து மோதியதில் ஹாசினி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், சந்திரன், அவரது மனைவி சித்ரா உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும், ஹாசினியை கொன்ற தனது தாய், தந்தையை தூக்கிலிட வேண்டும் என மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்