அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கார்.. குறுக்கே பாய்ந்த கால பைரவர்.. டிவைடர் மோதி விபத்து

x

ஈரோடு மாவட்டம் வெப்படை அருகே, நாய் குறுக்கே சென்றதால், தடுப்புச் சுவரில் கார் மோதி நின்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு காரில் புறப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே அம்மாபாளையம் பகுதியில் வந்தபோது, திடீரென நாய் குறுக்கே சென்றுள்ளது. இதைக் கண்ட சங்கர், திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதி சேதமடைந்தது. காயமடைந்த சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்