அதிரடி காட்டிய மாநகராட்சி நிர்வாகம்...ஆக்கிரமித்தவர்களுக்கு இறங்கிய இடி

x

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர பேருந்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடைகளின் முன் பகுதியில் கட்டப்பட்டிருந்த வளாகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. அதன் பேரில் அங்கு வந்த ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட கடைகளின் பொருட்களை எடுத்துச் சென்றும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவர்களை உடைத்தும் அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்