"கடும் அவதியில் மக்கள்" - பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

x

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி அடைந்து வருவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினமும் ஒரு மணி முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும், பல இடங்களில் மின்னழுத்த குறைபாட்டால் மின்விசிறிகள், குளிரூட்டிகளை இயக்க முடியாமல் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள மின்திட்டங்களை உடனடியாக செயல்படுத்தி, மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்