புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மின்கட்டணம்..இதை தெரிஞ்சிக்கிட்டு கட்டுங்க..மின்சாரத்துறை உத்தரவு

x

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த பெருமழையால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த மாவட்டங்களில் ஏராளமான வீடுகளில் தண்ணீர் தேங்கியிருந்ததால் மின் கணக்கீடு செய்வதில், சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், புயல் பாதித்த 4 மாவட்டங்களிலும் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி, மின்கட்டணம் வசூலிக்கலாம் என மின்வாரியத்துறை உத்தரவிட்டுள்ளது. அபராத தொகை இல்லாமல் வருகிற 18ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் கால அவகாசம் வழங்கி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்