ஜூன் 4.. வாக்கு எண்ணிக்கை நாளை மாற்ற கோரிய வழக்கு - ஐகோர்ட் அதிரடி

x

வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த கோரிய வழக்கை, நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. அதே போல வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், 45 நாட்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.தேர்தல் அறிவிப்பு, சட்ட விதிகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறும் வகையில் உள்ளதாக தமிழகத்தில் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டுமென கூறி, எழிலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை இரண்டும் தேர்தல் ஆணையத்தின் வரம்பிற்கு உட்பட்டதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்