ஆஸ்பத்திரியில் அட்டகாசம் செய்த முதியவர்கள்.. பேரதிர்ச்சி கொடுத்த பாட்டில்

x

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளி போல் நடித்து மது குடித்து கும்மாளம் அடித்த முதியவர்களை, இளைஞர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு தலைமை மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவில், சிகிச்சை பெற்று வந்த நபரின் படுக்கைக்கு அருகே மது பாக்கெட் கிடந்துள்ளன. அதுகுறித்து அங்கிருந்த இளைஞர்கள் கேட்ட நிலையில், மதுகுடித்ததை முதலில் மறுத்த முதியவர் அருகிலுள்ளவருடன் சேர்ந்து வலிக்காக குடித்ததாக கூறியுள்ளார். இளைஞர்கள் புகாரின் பேரில் இருவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க கூடுதல் காவலர்கள் பணியமர்த்த வேண்டும் என மருத்துவ அலுவலர் சிவகுமார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்