அசால்ட்டாக அடித்த விபூதி..ஏமாந்துரூ.30000/-த்தை இழந்த கடைக்காரர்..கடைசியில் நடந்தது தான் ட்விஸ்ட்டே

x

எடப்பாடி அருகேயுள்ள செட்டிமாங்குறிச்சியில் மளிகை கடை நடத்தி வருபவர் குமார். இவரது கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர் புகையிலை கேட்ட நிலையில், குமாரும் எடுத்துக் கொடுத்துள்ளார். திடீரென, தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறிக் கொண்ட அவர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை எவ்வாறு விற்கலாம் என கூறி மிரட்டிய நிலையில், அபராதமாக 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து தப்பிச்சென்றுள்ளார். இது குறித்து குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசாருக்கு, உணவு பாதுகாப்பு அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்டது பள்ளிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. மணிகண்டன் மீது ஏகப்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவர, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்