சாகும் பயிர்கள்..மேயும் ஆடுகள் - விவசாயிகள் வேதனை

x

போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை பயிர்களில் ஆடு, மாடுகள் கொண்டு மேய்க்கும் அவலம், திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் நிகழ்ந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம், களப்பால் உள்ளிட்ட பகுதிகளுக்கு, போதுமான அளவில் வரவில்லை. இதனால் அப்பகுதியில் பயிர்கள் கருக தொடங்கியுள்ளன. இனி அப்பயிர்களை காப்பாற்ற முடியாது என்பதால் வேதனை அடைதுள்ள விவசாயிகள், பயிர்களில் கால்நடைகளை கொண்டு மேய்த்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்