அடுத்த 48 மணி நேரத்தில்.."சூறாவளிக்காற்று.." - பறந்த எச்சரிக்கை

x

அடுத்த 48 மணி நேரத்தில்.."சூறாவளிக்காற்று.." - பறந்த எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்