வேலைக்காக துபாய் சென்ற கணவர்.. 3 மாதத்தில் மனைவிக்கு வந்த அதிர்ச்சி வீடியோ - கலெக்டர் ஆபீசில் கதறும் மனைவி

x

துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவரை அடிப்பது போன்ற வீடியோ வெளியானதால், தனது கணவரை மீட்டுத் தரக்கோரி சிவகங்கையைச் சேர்ந்த பெண் மனு அளித்துள்ளார். சிவகங்கை அருகே கூத்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் மதுபாலா. இவரது கணவர் பார்த்திபன், கடந்து மூன்று மாதங்களுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், தன்னை ஒரு நபர் அடிப்பது போன்ற வீடியோவை தனது மனைவியான மதுபாலாவுக்கு பார்த்திபன் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மதுபாலா, தனது கணவரை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்