குடித்துவிட்டு கணவன் அட்டூழியம்..யோசிக்காமல் மனைவி செய்த செயல்..திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

x

ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு ஊராட்சி பூனைக்குட்டி பள்ளம் பகுதியை சேர்ந்த யாழரசன் என்பவருக்கு, முதல் மனைவி உயிரிழந்த நிலையில், 2வதாக பிரதீபா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே, மதுப்பழக்கத்திற்கு அடிமையான யாழரசனுக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவனிடம் தகராறில் ஈடுபட்டு, பிரதீபா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், மாமியாரின் வீட்டிற்கு சென்ற யாழரசன், மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பிரதீபா மற்றும் அவரது தம்பி திருப்பதி இருவரும் யாழரசனை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பிரதீபா மற்றும் யாழரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்