போதையில் டிரைவர்.. சாலையில் பறந்த கார் - நொடியில் நடந்த விபரீதம்

x

சத்தியமங்கலம் அருகே மது போதையில் விபத்தை ஏற்படுத்திய இளைஞரை, பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சாலையில், தாறுமாறாக வந்த கார், எதிரே வந்த காரின் மீது மோதியது. இதனையடுத்து தாறுமாறாக வந்த காரின் உரிமையாளர், காரை ஓட்டியவரை இறக்கிவிட்டு விட்டு, தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து மதுபோதையில் இருந்த அந்த நபரை பிடித்து, பொதுமக்கள் தாக்கினர். இதனிடையே தப்பி சென்ற காரின் உரிமையாளர் திரும்பி வந்து, பொதுமக்களிடமும் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவரும் மதுபோதையில் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், அவரையும், விபத்து ஏற்படுத்தியவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்