ஆட்டோவில் பயணிகளை ஏற்றி... அடித்து பணம் பறித்த ஓட்டுநர் - அதிர வைக்கும் பின்னணி சம்பவம்

x

பணி நிமித்தம் காரணமாக பீகாரை சேர்ந்த 19 பேர், ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து எழும்பூர் ரயில் நிலையம் செல்வதற்காக, வால்டாக்ஸ் சாலை அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநர்களை நாடியுள்ளனர். பின்னர் 6 ஆட்டோவில் ஏற்றிச் செல்லப்பட்ட அவர்களை, எழும்பூர் வெகுதூரத்தில் இருப்பது போல் காட்டி, ஈசிஆர் உத்தண்டி அருகே நள்ளிரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் இறக்கி விட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் வீதம் 19 ஆயிரம் பெற்றதாகவும், பணம் கொடுத்த மறுத்தவர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்