மனதை மெல்ல மெல்ல அரித்த சந்தேகம்.. மனைவியை கருவறுத்த கணவன்

x

மதுராந்தகம் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை, போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கள்ளபிரான் கிராமத்தை சேர்ந்த ரமேஷ், தனது மனைவி ராதிகாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்ததாகவும், இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ரமேஷ், கத்தியால் ரதிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து ரமேஷை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்