தொழிலாளர் படித்த பள்ளிக்கு நன்கொடை - மாஸ் காட்டிய சிங்கப்பூர் தொழிலதிபர்

x

புதுக்கோட்டை மாவட்டம், கருக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கே. ஆர். செல்வம் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது திருமணம் மற்றும் தனது சகோதரர் திருமணத்திற்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். மேலும், இத்திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, செல்வம் பணியாற்றி வரும் நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்ட சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களும் கருக்காக்குறிச்சி கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், செல்வம் பயின்ற அரசு பள்ளிக்கு, 1 லட்ச ரூபாய் நன்கொடையை அவர் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் வழங்கியுள்ளார். தன்னிடம் பணியாற்றி வரும் ஊழியர் பயின்ற பள்ளிக்கு, ஒரு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்த தொழிலதிபரின் செயலைக் கண்டு அப்பகுதியினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்