“மருத்துவர்கள் அடிக்கடி விடுப்பு“ - அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி கேட்ட கவுன்சிலர்

x

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மன்ற கூட்டத்தில், அரசு அதிகாரிகளிடம் கவுன்சிலர் சரமாரி கேள்வி எழுப்பினார்.வளசரவாக்கம் மண்டலம் 11 அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் தலைவர் நொளம்பூர் ராஜன் தலைமையில் மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய 145 வது வார்டு அதிமுக மாமன்ற கவுன்சிலர் சத்தியநாதன், தன்னுடைய வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதாக கூறினார். பழுதான மின்கம்பங்களை சரிசெய்யவில்லை என்றும், மின்கம்பங்கள் சாய்ந்து மனித உயிர்கள் போனால் மீண்டும் திரும்புமா என, காட்டமாக கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்