"இத்தனை ஆண்டுக்கு பின்னால் ஒரு பெரும் சோதனை" - திருச்சி சிவா

x

எவ்வளவு பெரிய சதி வந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில், திமுக சார்பில் உரிமை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், வாயிலே வடை சுடுவதில் முதலிடத்தைப் பிடிக்கக் கூடியவர் நம்முடைய பிரதமர் என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, ஆளுநர் பதவி தேவையில்லாத‌து என்றும், ஒரு மாநில அரசு இயங்க விடாமல் ஆளுநர் இடையூறு செய்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்