திமுக MLA எழுப்பிய கேள்வி - பதில் சொன்ன அமைச்சர்

x

வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சட்டப்பேரவையில் உறுப்பினர் எழிலன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு,

கடந்த 10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பாழடைந்து இருந்த நிலையில், தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஜுன் 30ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் - ஆனால் முன்னதாகவே பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் முதலமைச்சர் திறந்து வைப்பார் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்