திமுக முன்னாள் அமைச்சர் மகன் வீட்டில் ரெய்டு... 2 பைகளில் சென்ற முக்கிய கோப்புகள்

x

திமுகவின் விளையாட்டு அணி மாநில துணை செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பைந்தமிழ் பாரி. இந்த நிலையில் கோவை கிருஷ்ணா காலனியில் உள்ள பைந்தமிழ் பாரி வீட்டில்,15 பேர் கொண்ட கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் பைந்தமிழ் பாரி மற்றும் அவரது தந்தை பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர், கல்குவாரி வைத்து தொழில் செய்து வரும் நிலையில், முறையாக கல் குவாரிகளை நடத்தாமல், விதிமுறைகளை மீறி செயல்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், கர்நாடகா பதிவு எண் கொண்ட இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள், தொடர் சோதனையில் ஈடுபட்டு, இரண்டு பைகளில் முக்கிய கோப்புகளை எடுத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்