திமுக பெண் நிர்வாகியை வீடு புகுந்து வெட்டிய இளைஞர்கள் - சென்னையில் அதிர்ச்சி

x

திமுக பெண் நிர்வாகியை வீடு புகுந்து வெட்டிய இளைஞர்கள் - சென்னையில் அதிர்ச்சி

கஞ்சா போதையில் தகராரு செய்த இளைஞர்களை தட்டிக்கேட்ட திமுக பெண் நிர்வாகியை வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடசென்னைக்குட்பட்ட ஆர் கே நகர் வள்ளலார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் 59 வயதான சரஸ்வதி. இவர் ஆர்கே நகர் மேற்கு பகுதி 38வது வட்ட திமுக கழகத் துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை சரஸ்வதி தட்டிக்கேட்டார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்து அந்த இளைஞர்கள் கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் சரஸ்வதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் வந்த போதை இளைஞர்கள்,தூங்கிக் கொண்டிருந்த சரஸ்வதியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதை அறிந்த குடும்பத்தினர் சரஸ்வதியை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் . இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்