"அரசு, மக்களுடன் இணைந்து இயற்றும் திட்டம் வெற்றி பெறும்" - அன்பில் மகேஷ் | DMK

x

தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு மக்களின் பங்களிப்பும் முக்கியம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், போதை பொருள் ஒழிப்பிற்கு மக்களின் பங்களிப்பும் முக்கியம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், காரப்பேட்டையில் 218 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்