#BREAKING || நாளை தீபாவளி... பேருந்து ஓட்டுநர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

x

வாணியம்பாடி அருகே அரசு விரைவு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து.

இதுவரை ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 60க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை.

விபத்து குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் கவனத்துடனும் பயணிகளை பத்திரமாக அழைத்துச் செல்லவும் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து பேருந்துகளிலும் குறிப்பிட்ட வேக வரம்பிற்கு கட்டுப்பட்டு ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் , பேருந்து ஓட்டும் போது கவன சிதறல்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவின்படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அனைத்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் பேருந்துகளை கவனமுடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து மண்டலங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்