அரசு- தனியார் பேருந்து ஓட்டுநர் இடையே தகராறு - சங்கரன்கோவிலில் பரபரப்பு

x

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயிலில், அரசு பேருந்து ஓட்டுனரை தனியார் பேருந்து ஓட்டுனர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோயில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வதில், இரு பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் குமார், காயத்துடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையறிந்த அரசு பேருந்து ஓட்டுனர்கள், பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து அரசு பேருந்து ஓட்டுனர்கள், தொடர்ந்து பேருந்துகளை இயக்கினார்கள்.



Next Story

மேலும் செய்திகள்