திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை... முதல் காதலி ரோட்டில்.. 2வது காதலி வீட்டில் - கடைசி நடந்த ட்விஸ்ட்

x

திருத்தணி அருகே, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண்ணும், குடிகுண்டா கிராமத்தை சேர்ந்த இளங்கோ என்பவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, இளங்கோ பல முறை பெண்ணிடம் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, வேறோரு பெண்ணை இளங்கோ, ரகசியமாக திருமணம் செய்ததை அறிந்த பெண், அதிர்ச்சி அடைந்து இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளங்கோ, சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்