தொடரும் கனமழையால் மிரட்டும் டெங்கு..! சிவகங்கையை மிரட்டும் தொற்று

x

சிவகங்கை மாவட்டத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் கால நிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வைரஸ் காய்ச்சலைத் தொடர்ந்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அதிக அளவில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மருத்துவர்களை சந்திக்கவும், மருந்துகளை வாங்கவும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்