மின்னல் வேகத்தில் பரவும் டெங்கு - 11 பேருக்கு தீவிர சிகிச்சை

x

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கும்பகோணத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக 30 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்