தடுப்புச் சுவரை இடித்து.. வீடுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.. தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்

x

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட தாழைக் கொம்பு புதூரில் கன மழை காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வீதிகளிலும் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில், வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்... பல ஆண்டு காலமாக அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாகவே மழை நீர் பள்ளத்தை சென்றடைந்த நிலையில், நிலத்தின் உரிமையாளர், தடுப்பு சுவர் அமைத்ததால் மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்