"பால் விநியோகம் செய்வதில் தாமதம்" - வெளியான முக்கிய காரணம்

x

சென்னை அம்பத்தூரில் பால்பண்ணை அமைந்துள்ள பட்டறைவாக்கம் சாலையில், 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி இருப்பதால் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் மழை நின்ற பிறகும் தண்ணீர் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால், வேலைக்குச் செல்வர்களும் அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்வர்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். பால் பண்ணை சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மழைக்கும் இந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்