"டேய் போடா.. போடா.." - கொஞ்சி கொஞ்சி காட்டு யானையை விரட்டிய வனத்துறையினர்

x

நீலகிரி பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட ராக்வுட் பகுதியில் ஊருக்குள் நுழைய முயன்ற ஒற்றைக் காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினர்... தினந்தோறும் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அந்த ஆண் காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்... வனத்துறையினருக்கு போக்கு காட்டி கிராமப் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்து வரும் சூழ்நிலையில் வன ஊழியர்கள் தங்களது தூக்கத்தை கலைத்து வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியும், சில நேரங்களில் கெஞ்சியும் கொஞ்சியும் விரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்