அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

x

கள்ளக்குறிச்சி அருகே அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்ட விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பார் கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி மற்றும் வட்டாட்சியர் பிரபாகரன் தலையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. முகாமில் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்ததாகவும், தொடர்ந்து காரில் ஏறி புறப்பட்ட அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்