இளைஞர் உயிரிழப்பு.. 2 மாதத்தில் தாய், சகோதரி விபரீத முடிவு.. சிக்கிய கடிதம் - நெஞ்சை உருக்கும் வரி

x

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், மன உளைச்சலில் இருந்த இளைஞரின் தாயும், சகோதரியும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்த உங்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரி. 21 வயதான இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் சூளகிரி அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். தலையில் பலத்த காயமடைந்த கிரி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் தனது சகோதரருக்கும், இளைஞர் ஒருவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாகவும், சகோதரரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறிய கிரியின் தாய் மற்றும் சகோதரி போலீசில் புகாரளித்து, விபத்தின் சிசிடிவி காட்சிகளை கேட்டுள்ளனர். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படும் நிலையில், கிரியின் தாய் காமாட்சி மற்றும் 17 வயது சகோதரி காவ்யாவும் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கடிதத்தில், தான் கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலி சகோதரன் வாங்கி கொடுத்ததால் அதை அகற்ற வேண்டாம் எனவும், தாங்கள் சகோதரனிடமே செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உரிய விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்