கழுத்தில் கடித்த கொடிய விஷப்பாம்பு...சுதாரித்த இளைஞர்...நொடியில் பிரிந்த உயிர் - சிவகங்கையில் சோகம்

x

சிவகங்கையில் வயலுக்கு இரவில் காவலுக்குச் சென்ற இளைஞர் கொடிய விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தார். எம்.சூரக்குடியைச் சேர்ந்த தீபன் கணேசன் என்ற 19 வயது இளைஞர், தங்களுக்கு சொந்தமான வயலுக்கு காவலுக்குச் சென்று தண்ணீர் பாய்ச்சி விட்டு கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது, அவரது கழுத்தில் கொடிய விஷப்பாம்பு கடித்துள்ளது. சுதாரித்து எழுந்த தீபன் கணேசன் கடித்த பாம்பை கையில் பிடித்துக் கொண்டு அருகில் உள்ள வயலில் காவலுக்கு படுத்திருந்தவரை அழைத்துக் கொண்டு எம்.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போதே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்