காயங்களுடன் கிடந்த சடலம் - நாமக்கலில் அதிர்ச்சி

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, ரத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவரங்காடு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, தலையில் ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்து கிடந்தவர் சீரங்கன் என்பதும், தர்மபுரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மது போதையில் தவறுதலாக கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்