மகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்..! அப்பா செய்த விபரீத செயல்.. அதிரடி காட்டிய போலீஸ் | Chennai Theft

x

கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர், தனது மகளின் பிறந்தநாளுக்கு பரிசு அளிப்பதற்காக, சென்னை போரூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் இரு சக்கரவாகன ஷோரூமில், புதிய வாகனம் வாங்குவதற்காக வந்துள்ளார். இறுதியாக பணம் மற்றும் சில ஆவணங்கள் வீட்டில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஷோரூம் ஊழியர் ஒருவருடன், புதிய வாகனத்தை ஒட்டிச் சென்றுள்ளார். ஷோரூம் ஊழியரிடம் வீடு வந்துவிட்டதாக கூறி இறங்க சொல்லி இருக்கிறார். ஊழியர் இறங்கிய அடுத்த நொடியில் சிவக்குமார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், சிவக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து புதிய வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது


Next Story

மேலும் செய்திகள்