"ஆட்டம்னா.. இப்படி இருக்குனும்.. நாக்கை மடித்து.." மரண குத்து குத்திய மாவட்ட கலெக்டர்

x

திருவள்ளூர் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஆட்சியர் பிரபு சங்கர் உற்சாக மிகுதியில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்... பாரம்பரிய உடையணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்... தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன... ஆட்சியர் அலுவலகம் திருவிழாக்கோலம் பூண்ட நிலையில், விழாவை மேலும் அழகாக்கியது ஆட்சியரின் நடனம் தான்... மேளதாளங்களுக்கு இணங்க ஊழியர்கள் நடனமாடிக் கொண்டிருக்க... சற்றும் எதிர்பாராத வகையில் ஆட்சியர் பிரபு சங்கரும் இறங்கி குத்தாட்டம் போட... அனைவரும் உற்சாகம் அடைந்தனர்... பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று உறியடித்து கலக்கினார்


Next Story

மேலும் செய்திகள்