இந்தியப் பெருங்கடலில் புது சுழற்சி... டிசம்பர் கடைசி வாரம் என்ன நடக்கும்?

x

ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமையன்று, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதனால், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 27 மற்றும் 28-ம் தேதி,

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,

29 மற்றும் 30-ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்