2 வழக்குகள் ரத்து...2 வழக்குகள் மறுப்பு - நீதிபதி கொடுத்த ஷாக்

x

முதல்வர் ஸ்டாலின், அரசு குறித்து அவதூறு பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 4 வழக்குகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான 2 வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்தார். தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என பேசியதற்காக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்து நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்